ராணி எலிசபெத் மறைவிற்கு தமிழக அரசு சார்பில் மரியாதை

Queen Elizabeth II Death England
By Irumporai Sep 11, 2022 03:39 AM GMT
Report

இங்கிலாந்து ராணி மறைவிற்கு தமிழக அரசு சார்பில்  மரியாதை செலுத்தபட்டது.

இங்கிலாந்து ராணி  காலமானார்

உலகில் நீண்ட காலம் ராணியாக இருந்தவர் என்று பெருமைக்குரியவர் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நடப்பது மற்றும் நிற்பதற்கு சிரமப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருந்தது.

ராணி எலிசபெத் மறைவிற்கு தமிழக அரசு சார்பில் மரியாதை | Queen Elizabeth On Behalf Of Tamil Nadu

இங்கிலாந்தின் நீண்டகால அரசியாக இருந்த இரண்டாம் எலிசபெத் கடந்த 8ம் தேதி இரவு உடல்நலக் குறைவால் காலமானார். கடந்த சில தினங்களாக மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த அவர் காலமானதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்தது.

 தமிழக அரசு சார்பில் மரியாதை 

அவரது மறைவிற்கு பல்வேறு நாட்டின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு வரும் 19-ந் தேதி நடைபெறும் என பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது.  

ராணி எலிசபெத் மறைவிற்கு தமிழக அரசு சார்பில் மரியாதை | Queen Elizabeth On Behalf Of Tamil Nadu

இந்நிலையில் பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. பென்னிகுயிக் சிலை திறப்பிற்காக இங்கிலாந்து சென்றுள்ள கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கேம்பரளி நகரில் வைக்கப்பட்டுள்ள ராணி எலிசபெத்தின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.