எலிசபெத் காலமானார்; இங்கிலாந்து நாட்டின் அரசராக மூத்த மகன் பதவியேற்கிறார்

Queen Elizabeth II England
By Thahir Sep 08, 2022 06:09 PM GMT
Report

இங்கிலாந்து மகாராணியாக ராணி எலிசெபத் காலமானார்.

இங்கிலாந்து நாட்டில் உள்ள பக்கிங்காம் மாளிகையில் ஓய்வு எடுத்து வந்த ராணி எலிசபெத் உடல்நலக் குறைவால் காலமானார்.இவருக்கு வயது 96.

லண்டனில் 1926 ஆம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி பிறந்தவர் மகாராணி எலிசபெத்.

எலிசபெத் காலமானார்; இங்கிலாந்து நாட்டின் அரசராக மூத்த மகன் பதவியேற்கிறார் | Queen Elizabeth Of England Passed Away

54 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட காமன்வெல்த் எனப்படும் பிரிட்டிஷ் ஆண்ட நாடுகளின் கூட்டமைப்பிலும் பொறுப்பு வகித்தார்.

பிரிட்டன் பிரதமர்களை தேர்வு செய்வதிலும் ராணி எலிசபெத்தின் பங்கு மிக முக்கியமானதாகும்.

மகாராணி எலிசபெத் காலமானதை அடுத்து அவரது மூத்த மகன் சார்லஸ் பதவியேற்கிறார்.