பிரிட்டன் ராணி மறைவு பெரும் சோகம் :பிரதமர்நரேந்திர மோடி இரங்கல்

Narendra Modi Queen Elizabeth II
By Irumporai Sep 08, 2022 06:28 PM GMT
Report

இங்கிலாந்து ராணி எலிசெபத் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்

ராணி மறைந்தார்

இங்கிலாந்து மகாராணியாக ராணி எலிசெபத். இங்கிலாந்து நாட்டில் உள்ள பக்கிங்காம் மாளிகையில் வசித்து வந்தார் இவருக்கு தற்போது 96 வயதாகும் நிலையில். இவருக்கு திடீரென இன்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து, மகாராணியின் அதிகாரப்பூர்வன மருத்துவக்குழுவினர் ராணிக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில்இங்கிலாந்து மகாராணி எலிசெபத்திற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பது இங்கிலாந்து நாட்டினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் விரைவில் நலம் பெற வேண்டிய உலகத்தலைவர்கள் பிரார்த்தனை செய்தனர்

பிரிட்டன் ராணி மறைவு பெரும் சோகம் :பிரதமர்நரேந்திர மோடி இரங்கல் | Queen Elizabeth Ii Has Died Modi

இந்த நிலையில் பிரிட்டன் ராணி எலிசபெத் (வயது 96) காலமானர்- பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது. எலிசெபத் 70 வருடங்கள் பிரிட்டன் ராணியாக இருந்துள்ளார் இந்த தகவல் பிரிட்டன் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மோடி இரங்கல்

இந்த நிலையில் இந்திய பிரதமர் மோடி தனது ட்விட்டரில் இரங்கலை தெரிவித்துள்ளார், அதில் 2015 மற்றும் 2018 ஆம் ஆண்டு எனது இங்கிலாந்து வருகைகளின் போது அவரது மாட்சிமை ராணி இரண்டாம் எலிசபெத் உடன் நான் மறக்கமுடியாத சந்திப்புகளை மேற்கொண்டேன்.

அவரது அரவணைப்பையும் கருணையையும் என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. ஒரு சந்திப்பின் போது மகாத்மா காந்தி தன் திருமணத்திற்கு பரிசாக கொடுத்த கைக்குட்டையை என்னிடம் காட்டினார். அந்த சைகையை நான் எப்போதும் போற்றுவேன்

பொது வாழ்வில் கண்ணியத்தையும் கண்ணியத்தையும் வெளிப்படுத்தினார். ராணி மறைவால் வேதனை அடைந்தேன். இந்த சோகமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் இங்கிலாந்து மக்களுடனும் உள்ளன.