ராணி எலிசெபத் மறைந்த தருணத்தில் வானில் தோன்றிய இரட்டை வானவில்

Queen Elizabeth II Viral Photos Death
By Nandhini Sep 09, 2022 07:39 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

இங்கிலாந்து ராணி எலிசெபத் மறைவு

இங்கிலாந்து மகாராணியாக வாழ்ந்து வந்த ராணி எலிசெபத் (96) உடல்நலக்குறைவால் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

தொடங்கியது 'ஆபரேஷன் யூனிகார்ன்'

இங்கிலாந்து ராணி ஸ்கார்ட்லாந்தில் இறந்ததால் ஆபரேஷன் யூனிகார்ன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆபரேஷன் யூனிகார்ன் என்பது ராணி எலிசபெத் இறந்த நாளிலிருந்து அடுத்த 10 நாட்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும் திட்டமாகும். நேற்று இறந்த இங்கிலாந்து ராணியின் உடல் லண்டனுக்கு திரும்ப இருக்கிறது.

queen-elizabeth-death-viral-photo

வானில் தோன்றிய இரட்டை வானவில்

ராணி எலிசபெத் இறக்கும் தருணத்தில், பக்கிங்காம் அரண்மனை பகுதியில் இரட்டை வானவில் தோன்றியது. இதைப் பார்த்த இங்கிலாந்து மக்கள் பெரும் உணர்ச்சிபெருக்கில் ஆளானார்கள். அதேபோல் பால்போன் அரண்மனையிலும் வானவில் தோன்றியது. அப்போது கடவுள் இரண்டாம் எலிசபெத் ராணியை பாதுகாத்துள்ளார் என்று மக்கள் நினைத்து கண்ணீரோடு அந்நாட்டின் தேசிய கீதத்தைப் பாடினர்.

இது குறித்த வீடியோ, புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் இரண்டாம் எலிசபெத் ராணிக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.