காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் ரத்து
2021ம் ஆண்டிற்கான காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் & பள்ளிக்கல்வித்துறை சார்ந்த திட்டங்கள் தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று ஆலோசனை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திட்டமிட்டபடி நவம்பர் 1ஆம் தேதி 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று.
காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகள் இந்த ஆண்டு நடத்துவதற்கான வாய்ப்பில்லை.
டிசம்பர் மாதத்தில் ஒருங்கிணைந்த முறையில் ஒரே ஒரு தேர்வை மட்டும் நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
5-ம் வகுப்பு வரை மாணவர்கள் நீண்ட நேரம் முகக்கவசம் அணிந்து வகுப்புகளில் தொடர்ச்சியாக வகுப்புகளில் அமர்வது என்பது கடினமான ஒரு சூழ்நிலையாக இருக்கும்.
எனவே பெற்றோர்கள் விரும்பினால் ஒரு மணி நேரத்தில் கூட பிள்ளைகளை வீடுகளுக்கு அழைத்துச் செல்லலாம் என தெரிவித்துள்ளார்.