மரண தண்டனை; மோடி தலையிட வேண்டும் - முன்னாள் கடற்படை அதிகாரியின் சகோதரி கோரிக்கை
பிரதமர் மோடிக்கு ன்னாள் கடற்படை அதிகாரியின் சகோதரி கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
மரண தண்டனை
கத்தார் நாட்டின் அதிநவீன நீர் மூழ்கி கப்பல் குறித்த தகவல்களை இஸ்ரேல் நாட்டுக்கு வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு, இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் பிரேந்திர குமார் வெர்மா,
கேப்டன் சவுரப் வஷிஷ்ட், கமாண்டர் அமித் நாக்பால், கமாண்டர் பூர்ணேந்து திவாரி, கமாண்டர் சுகுநகர் பகாலா, கமாண்டர் சஞ்சீவ் குப்தா, கடற்படை வீரர் ராகேஷ் ஆகியோர் கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டனர்.
மோடி தலையீடு
தற்போது, கத்தார் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது. அவர்களை தண்டனையில் இருந்து விடுவிக்க இந்திய அரசு சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், ஓய்வு பெற்ற கமாண்டர் பூர்ணேந்து திவாரியின் சகோதரி பார்கவா (54),
"நேரப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி, 8 இந்தியர்களையும் திரும்பக் கொண்டுவர பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும். என் தம்பி மட்டுமல்ல, 8 பேரும் தாயகம் வர வேண்டும். என் தம்பி மூத்த குடிமகன். அவருக்கு வயது 63. அவருக்கு 2019ல் பிரவாசி பாரதிய சம்மான் வழங்கப்பட்டது.
அவர் ஏன் இஸ்ரேலுக்காக உளவு பார்க்க வேண்டும்? இந்த வயதில் அவர் ஏன் இப்படிச் செய்வார்? நீதித்துறை செயல்பாட்டில் முழுமையான வெளிப்படைத்தன்மை இல்லை. எதுவும் வெளிப்படுத்தப்படவில்லை. இது அங்குள்ள சட்ட அமைப்பின் மீது நமக்குள்ள நம்பிக்கையை குலைக்கிறது.
அவர்கள் என்ன குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்கள் என்பது எங்களுக்கு ஒருபோதும் தெளிவாகத் தெரியவில்லை. 8 பேரும் ஒரே மாதிரியான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர் என்பது எங்களுக்குத் தெரியும் எனத் தெரிவித்துள்ளார்.