புழல் ஏரியில் உபரி நீர் திறப்பு - வெள்ளம் சூழந்ததால் வாகன ஓட்டிகள் அவதி

puzhal lake water open highways flood
By Anupriyamkumaresan Nov 09, 2021 04:29 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in தமிழ்நாடு
Report

சென்னையின் குடிநீர் ஆதாரமான புழல் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதை அடுத்து செங்குன்றம் - மாதவரம் நெடுஞ்சாலையில் வெள்ளம் சூழ்ந்தது.

புழல் ஏரியில் திறக்கப்படும் உபரி நீர், நாரவாரிக்குப்பம், சாமியார் மடம், தண்டல்கழனி, வடகரை, வடப்பெரும்பாக்கம், கொசப்பூர் உள்ளிட்ட பகுதிகளை கடந்து எண்ணூர் கழிமுக பகுதியில் கடலில் கலக்கும்.

புழல் ஏரியில் உபரி நீர் திறப்பு - வெள்ளம் சூழந்ததால் வாகன ஓட்டிகள் அவதி | Puzhal Lake Water Open Highwaysflood Affect Public

இந்நிலையில், திறக்கப்பட்ட உபரி நீருடன், மழை நீரும் சேர்ந்ததால், செங்குன்றம் - மாதவரம் நெடுஞ்சாலையில், வெள்ளம் சூழ்ந்தது. குறிப்பாக வடப்பெரும்பாக்கம் பகுதியில் 2 கிலோ மீட்டர் தூரம் வரை வெள்ளம் சூழ்ந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இதனால், மூலக்கடை, மாதவரம் செல்வோர், சென்னை - கொல்கத்தா தேசிய நெடுங்சாலை வழியாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.