அப்படி ஓர் உடல்வலி.. ஓய்வு நிலைக்கு தள்ளிவிட்டது - பிரபல நடிகை வேதனை!
நடிகை பூனம் கவுர் தீவிர நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பூனம் கவுர்
தமிழில் நெஞ்சிருக்கும் வரை படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூனம் கவுர்(36). தொடர்ந்து உன்னைப்போல் ஒருவன், வெடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் ஃபைப்ரோமியால்ஜியா என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்
இது "பரவலான தசைக்கூட்டு வலியுடன் கூடிய சோர்வு, தூக்கம், நினைவாற்றல் மற்றும் மனநிலை மாற்றம்" போன்ற பிரச்சனைகளை கொண்டிருக்குமாம். இதனால் பாதிக்கப்பட்டால், வாழ்நாள் முழுவதும் அதோடு அவர் வாழ பழகிக் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நோய் பாதிப்பு
சமூக செயல்பாட்டாளரான இவர் கைத்தறி நெசவாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தும் விதத்தில், ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ராவில் பங்கேற்றிருந்தார். அப்போது, பூனம் கவுரின் கரத்தை பிடித்தபடி ராகுல்காந்தி நடந்ததை பலரும் கேள்வி எழுப்ப,
`நான் நடக்கும்போது தவறி கீழே விழ இருந்தேன். அதனால்தான் ராகுல்காந்தி என் கையைப் பிடித்து நடந்தார்' எனத் தெரிவித்துள்ளார்.