ஐபிஎல் 2022 : பஞ்சாப்-பெங்களூரு மோதும் 3-வது போட்டியில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது பஞ்சாப் அணி
ipl2022
pbksvsrcb
punjabtosswon
rcbtobat
punjabtobowl
By Swetha Subash
ஐபிஎல் 15-வது சீசனுக்கான போட்டிகள் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று தொடங்கியது.
முதல் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இதில் சென்னையை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வீழ்த்தியது.
இந்நிலையில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி நடைபெற்ற இரண்டாம் போட்டியில் மும்பை மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இதில் மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இதனை தொடர்ந்து இந்த சீசனின் மூன்றாம் போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ள நிலையில் டாஸ் வென்றுள்ள பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.