புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் - நடிகர் விஜய் அஞ்சலி
பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி செலுத்தினார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29ஆம் தேதி பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உடற்பயிற்சி மேற்கொண்டிருந்த போது தீடீர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் புனித் ராஜ்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இளம் வயதில் மரணமடைந்த செய்தி அவரது ரசிகர்கள் மட்டுமின்றி கன்னட திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதனிடையே புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தில் பல்வேறு நடிகர்,நடிகைகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக நடிகர்களின் முன்னணி நடிகரான விஜய் இன்று அவரது நினைவில்லத்திற்கு சென்றார். அங்கு அவர் மாலை அணிவித்து தனது அஞ்சலியை செலுத்தினார்.
#Vijay | மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி. #PuneethRajkumar pic.twitter.com/xUQLTCiQ1y
— Senthilraja R (@SenthilraajaR) February 26, 2022