புதுச்சேரியில் நாளை பள்ளிகள் திறப்பு இல்லை - தள்ளிவைப்பு!!
open
school
puducherry
cancel
By Anupriyamkumaresan
புதுச்சேரியில் நாளை பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பள்ளிகள் திறக்கப்படாது என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை நாளையிலிருந்து பள்ளிகள் திறக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஆளுநர் தமிழிசையை சந்தித்த பிறகு கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ஆளுநரிடம் கலந்தாலோசித்துள்ளதாகவும், பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் புதுச்சேரியில் நாளை பள்ளிகள் திறப்பு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.