புதுச்சேரியில் இதுவரை இரண்டு பேர் கருப்பு பூஞ்சை நோயால் உயிரிழப்பு..!
puducherry
tamilisai
2 dead
black fungus
By Anupriyamkumaresan
புதுச்சேரியில் கருப்பு பூஞ்சை நோயால் இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார், புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், தொடர்ந்து மத்திய அரசிடம் இருந்து மருந்துகள் புதுச்சேரிக்கு வழங்கப்பட்டு வருவதாகவும், புதுச்சேரிக்கு தேவையான ஆக்சிஜனை மத்திய அரசு வழங்கும் என கடிதம் அனுப்பி உள்ளதாகவும் தெரித்துள்ளார். மேலும், புதுச்சேரியில் இதுவரை இதுவரை 40 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில், இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
