பிஎஸ்எல் டி20 கிரிக்கெட் - பாகிஸ்தான் ஜாம்பவான் அஃப்ரிடி திடீர் விலகல் - ரசிகர்கள் அதிர்ச்சி
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஷகித் அஃப்ரிடி, பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவருடைய முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாகவும், அதனால் கடுமையாக வலி ஏற்படுவதாலும் இந்தப் போட்டியிலிருந்து விலகிக்கொள்வதாக சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்தள்ளார்.
இது குறித்து அவர் தனது சமூகவலைத்தளத்தில், “சுமார் 15 - 16 ஆண்டுகளாகள் இந்த முதுகு பகுதியில் ஏற்பட்ட காயத்துடன் விளையாடி வருகிறேன். இப்போது அந்த காயம் எனக்கு அதிக வலியை கொடுக்கிறது. அதனால் வேறு வழி இல்லாமல் விலக வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.
காயத்திலிருந்து மீண்டதும் ரசிகர்களுக்காக மீண்டும் களத்திற்கு திரும்புவேன்” என பதிவிட்டுள்ளார். கிட்டத்தட்ட கடந்த 7 வருடங்களாக பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் அஃப்ரிடி விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.