பிஎஸ்பிபி பள்ளியை அரசு கையகப்படுத்த வாய்ப்பு இருக்கு... வழக்கறிஞர் அஜீதாவுடன் சிறப்பு நேர்காணல்...
சென்னையில் செயல்படும் பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
இதனையடுத்து ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பள்ளி நிர்வாகிகள், பாதிக்கபட்ட மாணவிகள் என அனைவரிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே சம்பந்தபட்ட பள்ளியை அரசு கையகப்படுத்த வேண்டும் என முதலமைச்சர் தனிப்பிரிவில் ஆசிரியர் கூட்டமைப்பு மனு அளித்திருந்தது.
இதனையடுத்து முறையை அரசு கையகப்படுத்த பரிசீலித்து வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் பிஎஸ்பிபி பள்ளியை அரசு கையகப்படுத்த வாய்ப்பு இருப்பதாக நமது ஐபிசி தமிழ்நாடு-க்கு அளித்த சிறப்பு நேர்காணலின்போது வழக்கறிஞர் அஜிதா தெரிவித்துள்ளார்.
முழு பேட்டியை காண: