போராட்டத்துக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை : மாணவி தரப்பு வழக்கறிஞர் திடுக்கிடும் தகவல்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கணியாமூரில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கிப் படித்த 12 ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் மாணவியின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
கலவரமான கள்ளக்குறிச்சி
மேலும், மாணவியின் பிரேத பரிசோதனை நேற்று முன்தினம் நிறைவடைந்த நிலையில் உடல் கூறு ஆய்வு தொடங்குவதற்கு முன் 36 மணி முதல்48 மணி நேரத்திற்கு முன்பே மாணவி உயிரிழந்திருக்கலாம் என்றுநேற்று அறிக்கை வெளியானது.
அதில் மாணவியின் உடைகளிலும் ரத்த கறைகள் இருந்தன - என அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது இதனை யடுத்து மாணவியை கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறி மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீவைத்த போரட்டக்காரர்கள்
போராட்டத்தின் போது மாணவர்களை போலீசார் பேரி கார்டை வைத்து தடுத்து நிறுத்தியதால் போலீசாருக்கும் மாணவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு கற்கள் வீசப்பட்டு வருகின்றனர் .
தொடர்ந்து போராட்டக்காரர்கள் போலீஸ் பாதுகாப்புக்காக வந்த வேன்களை அடித்து நொறுக்கியும் பள்ளியின் முகப்புகளை கற்களால் அடித்து நொறுக்கியும் பேருந்துகளுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.
டிஜிபி எச்சரிக்கை
இந்த போரட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி சைலேந்திர பாபு ஆசிரியர்கள் மீது உள்ள புகாரில் உண்மை இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்.
வன்முறையில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்கபடும் எனக் கூறியுள்ள டிஜிபி வன்முறையினை கட்டுப்படுத்த சிறப்பு படைகளுடன் கள்ளக்குறிச்சி செல்ல உள்ளதாக தகவல் வெளியானது.
எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை
இந்த நிலையில், தற்போது நடந்து வரும் போராட்டத்தில் மாணவியின் உறவினர்கள் யாரும் பங்கேற்கவில்லை என்று மாணவி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
மேலும் வன்முறை வெடித்ததால் உறவினர்கள் பாதி வழியில் திரும்பிவிட்டனர். போராட்டத்துக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. போராட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.