நீட் தேர்விற்கு எதிர்ப்பு - வரும் 20-ஆம் தேதி திமுக சார்பில் உண்ணாவிரதம்
நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 20-ஆம் தேதி திமுக இளைஞரணி, மருத்துவரணி மற்றும் மாணவரணி சார்பில் கண்டன உண்ணாவிரத ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு எதிர்ப்பு
சில நாட்கள் முன்பு, சென்னை குரோம்பேட்டையில் நீட் தேர்வில் போதுமான மதிப்பெண்களை பெறாத நிலையில், ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அடுத்த நாள் அவரது தந்தையும் தற்கொலை செய்துகொண்டார்.
இச்சம்வம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இந்த சம்பவம் நடைபெறுவதற்கு சில தினங்கள் முன்பு தான் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நீட் தேர்விற்கு விலக்கு அளிக்கும் மசோதாவில் ஒரு போதும் கையெழுத்திட மாட்டேன் என திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.
திமுக உண்ணாவிரதம்
இந்நிலையில், தான் வரும் 20-ஆம் தேதி மாவட்டங்களின் தலைநகரில் திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி ஆகியற்றின் சார்பில் கண்டன உண்ணாவிரதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை இந்த நீட் தேர்வு சிதைப்பதாக குறிப்பிட்டும், தமிழக ஆளுநர் மற்றும் மத்திய ஆளும் பாஜக அரசிற்கு எதிராகவும் இந்த கண்டன உண்ணவிரத ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.