நயன்தாரா, த்ரிஷா, ஆண்ட்ரியாவை சரமாரியாக திட்டிய பிரபல தயாரிப்பாளர் - திரையுலகினர் அதிர்ச்சி

producerkrajan mudhalmanidhan
By Petchi Avudaiappan Oct 23, 2021 04:10 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

நடிகைகள் நயன்தாரா, த்ரிஷா, ஆண்ட்ரியாவை  தயாரிப்பாளர் கே.ராஜன் கடுமையாகச் சாடிப் பேசியுள்ளது தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உசேன் தயாரிப்பில், இயக்குநர் ராஜராஜ துரை இயக்கத்தில் ஆடுகளம் நரேன், மாரிமுத்து, கெளசல்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள  படம் 'முதல் மனிதன்'. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று  நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன், இயக்குநர்கள் பேரரசு, ஆர்.வி.உதயகுமார், தயாரிப்பாளர் கே.ராஜன் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர்.


விழாவில் பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன், இது ஒரு நல்ல படம் அல்ல, மக்களுக்கு நல்ல பாடம். இந்தப் படம் பெரும் வெற்றி பெற வேண்டும் என கூறினார். இப்போது படம் எடுத்தால் 12 கேரவன், நயன்தாரா ஷூட்டிங் வந்தால் 7 உதவியாளர்கள், அனைவருக்கும் சேர்த்து ஒரு நாளைக்கு 2 லட்சம் சம்பளம். ஆண்ட்ரியா தமிழ் நடிகை. ஆனால், மும்பையில் இருந்து மேக்கப் மேன் வேணும் என்கிறார்.

இப்படி இருந்தால் தயாரிப்பாளர் எப்படிப் பிழைப்பான். நடிகர்கள் இன்று கேரவனில் சீட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். ரஜினி வந்தால் படப்பிடிப்புத் தளத்திலேயே இருக்கிறார். மம்முட்டி சொந்த கேரவன் வைத்திருக்கிறார். அவர்கள் தயாரிப்பாளருக்குச் செலவு வைப்பதில்லை, நம் ஹீரோக்களை எல்லாம் என்ன சொல்வது. சிலர் அக்கிரமம் செய்வதை நான் எடுத்துச் சொல்கிறேன். 

நடிகை த்ரிஷா நடித்த படத்தின் விழாவிற்கு வர 15 லட்சம் ரூபாய் கேட்கிறார். வெற்றி பெற்ற பிறகு இசை வெளியீட்டு விழாவுக்கு வரமாட்டேன் எனச் சொல்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன். அது யாராக இருந்தாலும் பரவாயில்லை. தயாரிப்பாளருக்கு உதவ வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்று  கே.ராஜன் தெரிவித்துள்ளார்.