ரூ. 2 லட்சத்திற்கு மேல் ரொக்கமாக பணம் பெற்றால் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனை
பெரிய தொகை ஒன்றை ரொக்கமாக கொடுத்தாலோ அல்லது பெற்றுக் கொண்டாலோ உங்களுக்கு பிரச்சனை நேரிடும்.
என்ன பிரச்சனை?
தற்போதைய காலத்தில் சிறிய டீக்கடைகள் தொடங்கி பெரிய மால் வரை UPI பரிவர்த்தனைகளையே மக்கள் விரும்புகின்றனர்.
ஆனால், ரியல் எஸ்டேட் அல்லது வணிக பரிவர்த்தனைகள் போன்ற பெரிய பணப் பரிமாற்றங்களை பலரும் ரொக்கமாகவே மேற்கொள்கின்றனர். இதில் தான் ஒரு சிக்கல் உள்ளது.
அதாவது, நீங்கள் ரூ. 2 லட்சத்திற்கு மேல் ரொக்கமாக பணம் செலுத்தினால் பிரச்சனையை சந்திக்க நேரிடும்.
வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 269 STஇன் கீழ், ரூ.2 லட்சம் அல்லது அதற்கு மேல் பணத்தை ரொக்கமாக செலுத்தினால் 100 சதவீதம் அபராதம் செலுத்த நேரிடும்.
இதனை தவிர வெவ்வேறு நாட்களில் ரூ.3 லட்சத்தை பிரித்து, ஒவ்வொரு நாளும் ரூ.1 லட்சம் செலுத்தினாலும் சட்டவிரோதமாகக் கருதப்படும்.
இந்த அபராதத்தை நீங்கள் தவிர்க்க வேண்டும் என்று நினைத்தால் வங்கிக்கு சென்று பணம் அனுப்புவது, UPI மற்றும் ஓன்லைன் கட்டணங்கள் மூலம் பணம் செலுத்த வேண்டும்.
ஆனால், யூபிஐ பரிவர்த்தனைகளில் பெரும்பாலான மக்கள் மோசடிகளையும் எதிர்கொண்டு வருகின்றனர். அவை என்னென்ன என்பதையும் இப்போது நாம் பார்க்கலாம்.
என்னென்ன மோசடிகள்
* வங்கி பிரதிநிதிகள் போல நடித்து மின்னஞ்சல்கள், SMS அல்லது தொலைபேசி அழைப்புகள் மூலம் UPI ID மற்றும் கடவு சொல்லை கேட்பார்கள்.
* போலி UPI செயலிகளை உருவாக்கி பயனர்களை தரவிறக்கம் செய்ய வைத்து தனிப்பட்ட தகவல்களை திருடுவார்கள்.
* பணத்தைப் பெற ஸ்கேன் செய்யப்படும் QR குறியீடு பயனர்களின் கணக்கிலிருந்து பணத்தைக் கழிக்கும் கட்டணக் கோரிக்கையை உருவாக்குகிறது. இதன் மூலம் மோசடி நடக்கிறது
* கட்டண இணைப்புகள் போல கட்டணக் கோரிக்கையை உருவாக்குவார்கள். அதனை நாம் க்ளிக் செய்து UPI ID போடும் போது மோசடி செய்ய வாய்ப்புள்ளது.
* உண்மையான UPI ஐடிகளைப் போல போலி UPI ஐடிகளை உருவாக்கி பயனர்களை அதில் பணம் அனுப்ப சொல்வார்கள்.