புரோ கபடி லீக் 2024 - முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்ற புனேரி பால்டன்!
புரோ கபடி லீக் தொடரில் புனேரி பால்டன் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
புரோ கபடி லீக்
அகமதாபாத்தில் 10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த டிசம்பர் 2-ம் தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் முதலாவது அரையிறுதி போட்டியில் பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தி புனேரி பால்டன் அணி தொடர்ந்து 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
மற்றொரு அரையிறுதி போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சை வீழ்த்தி முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
புனேரி பால்டன் வெற்றி
இந்நிலையில் தெலங்கானா மாநிலம் கச்சிபெளலியில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் புனேரி பால்டன் - அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின.
இதில் புனேரி பால்டன் அணி, 28-25 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் புனேரி பால்டன் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.