பிக் பாஸ் வீட்டில் இருந்து வலுகட்டாயமாக வெளியேற்றப்பட்ட பிரியங்கா..!

Priyanka Deshpande Exits Biggboss House
By Thahir Jan 15, 2022 07:38 AM GMT
Report

பிக்பாஸ் வீட்டில் இருந்த போட்டியாளர் பிரியங்கா மருத்துவமனையில் திடிரென அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இன்னும் சில நாட்களில் மொத்தமாக இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வரவுள்ளது.

18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் தற்போது 7 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இதில் அமீர் கடந்த வாரம் நடந்த டிக்கெட் டூ பினாலே டாஸ்கில் வெற்றி பெற்றதன் மூலம் நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

மீதமுள்ள ராஜு, பிரியங்கா, சிபி, நிரூப், பாவனி ஆகிய ஆறு பேரில் இறுதிப்போட்டிக்குள் நுழையப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது.

இதில் ராஜு அல்லது பிரியங்கா இருவரில் ஒருவர் கட்டாயம் பிக்பாஸ் வெற்றியாளராவார் என ரசிகர்கள் கணித்து வருகின்றனர்.

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஈரமான ரோஜாவே 2 நடிகர்கள் மற்றும் செந்தூரப்பூவே நடிகர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு வருகின்றனர். அவர்கள் கண்ணாடி கூண்டில் இருந்தபடி போட்டியாளர்களை சந்திக்கின்றனர்.

பின்னர் அனைவரின் மனம் கவர்ந்த போட்டியாளராக ராஜு தேர்ந்தெடுக்கப்படுகிறார். இந்நிலையில் நேற்றைய தினம் வெளியான இரண்டாவது மற்றும் மூன்றாவது புரமோவில் பிரியங்கா இடம்பெறாத நிலையிலேயே ரசிகர்கள் பிரியங்காவுக்கு என்ன ஆச்சு என சந்தேகங்களை கிளப்பினர்.

இப்படியான நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி பிக் பாஸ் வீட்டில் இருந்து உடல்நலக்குறைவு காரணமாக பிரியங்கா வெளியேறி இருப்பதாகவும் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.