முதல்முறையாக தன் மகளின் முகத்தை உலகிற்கு காட்டிய பிரியங்கா சோப்ரா... - வைரலாகும் புகைப்படம்...!

Priyanka Chopra Viral Photos
By Nandhini Jan 31, 2023 04:06 PM GMT
Report

முதல்முறையாக தன் மகளின் முகத்தை உலகிற்கு பிரியங்கா சோப்ரா காட்டியுள்ளார்.

மகளின் முகத்தை உலகிற்கு காட்டிய பிரியங்கா சோப்ரா

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பிரியங்கா சோப்ராவும், அமெரிக்க பாடகர் நிக் ஜோனாஸும் வாடகைத் தாய் மூலம் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்ததாக சமூக ஊடகங்களில் அறிவித்தனர்.

இந்நிலையில், ஒரு வருடங்கள் கழித்து சோப்ரா தன்னுடைய மகளின் மால்டி மேரியின் முகத்தை உலகத்திற்கு காட்டியுள்ளார். சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த ஒரு நிகழ்வில் இருவரும் கலந்து கொண்டனர்.

அப்போது, அங்கு அவரது கணவர் நிக் ஜோனாஸ் கெவின் மற்றும் ஜோ ஜோனாஸுடன் சேர்ந்து ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேம் நட்சத்திரத்தை வெளிப்படுத்தினார்.

ஜோனாஸ் சகோதரர்கள் மைய அரங்கிற்கு வந்தபோது, ​​பிரியங்கா முதல் வரிசையில், தன் மகள் மால்டி மேரியுடன் அமர்ந்து அவர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார்.

தற்போது பிரியங்கா சோப்ராவின் மகள் மால்டி மேரியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தைப் பார்த்த அவரது ரசிகர்கள் ஆஹா... என்ன அழகு... குழந்தை பொம்மை போல் உள்ளது என்று வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.   

priyanka-chopra-and-baby-malti-viral-photo