பிரியாணியில் கிடந்த கரப்பான் பூச்சி... - சமையலறையில் நெண்டிய புழு, பூச்சிகள்... பிரபல புகாரி ஓட்டலுக்கு சீல் - அதிகாரிகள் அதிரடி
சென்னை ஓ.எம்.ஆர். ஒக்கியம் துரைப்பாகத்தில் பிரபல புகாரி ஹோட்டல் உள்ளது. இந்த ஓட்டலிலுக்கு தம்பதி உணவு சாப்பிட சென்றுள்ளனர். அப்போது அந்த தம்பதி பிரியாணி ஆர்டர் சென்றுள்ளனர்.
ஓட்டல் ஊழியர்களும் பிரியாணியை கொண்டு வந்து கொடுத்துள்ளனர். பிரியாணியை தட்டில் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது, அந்த பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்துள்ளது.
இதைப் பார்த்த தம்பதி அதிர்ச்சி அடைந்தனர். உடனே, ஊழியர்களை கூப்பிட்டு இது குறித்து கேட்டுள்ளனர். ஆனால், ஊழியர்கள் தம்பதியை சமாதானப்படுத்த முயற்சி செய்தனர்.
ஆனால், தம்பதி சமாதானம் அடையாமல், உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர். உடனே, புகாரி ஓட்டலுக்கு அதிகாரி சுகுமார், போலீசார் உதவியுடன் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது, ஓட்டல் சுற்றி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். ஓட்டல் சமையலறையை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
சுத்தம் இல்லாமல், பூச்சிகள் இங்கும், அங்கும் ஓடிக் கொண்டிருந்தன. மேலும், ஓட்டல் சமையலறை சுற்றி சுகாதாரம் இல்லாமல் குப்பை கூளமாக காட்சி அளித்தது. இதனையடுத்து, அதிகாரி சுகுமார் ஓட்டலில் சமைக்கப்பட்ட உணவுகளை குப்பையில் கொட்டச் சொன்னார்கள்.
பிறகு, ஓட்டலுக்கு 3 நாட்களுக்கு இழுத்து மூடி, சீல் வைக்க உத்தரவிட்டதுடன், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். மேலும், உணவு மீதான புகாரை 3 நாட்களுக்கு சரிசெய்து, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உணவுகளின் தரம் சரிபார்த்த பின்னரே, உணவகத்தை திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

ஈழத்தமிழர்களுக்காக கடலில் இறங்கிய 5000 தமிழக மறவர்களும் காசாவுக்கு போன கப்பலை கடத்திய இஸ்ரேலும்..! IBC Tamil
