பணம் தான் முக்கியம்.. அதுக்காகத்தான் நடிக்க வந்தேன் - பிரியா பவானி சங்கர் பளீச்!

Sumathi
in பிரபலங்கள்Report this article
பணத்திற்காகத்தான் நடிக்க வந்தேன் என்று நடிகை பிரியா பவானி சங்கர் தெரிவித்துள்ளார்.
பிரியா பவானி சங்கர்
சின்னத்திரையில் தொடர்களில் நடித்த பிரபலமாக இருந்த நடிகை பிரியா பவானி சங்கர் இப்பொழுது தமிழ் சினிமாவின் இளம் நடிகையாக கலக்கி கொண்டு உள்ளார். இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான மேயாதமான் படத்தில் ஹீரோயினாக நடித்து
தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரியா பவானி சங்கர் இப்போது பல திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார் . இன்ஸ்டகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் திடீரென தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தார்.
பணம் தான் முக்கியம்
இந்நிலையில், பேட்டி ஒன்றில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு படங்களில் நடிக்கவில்லை. படங்களில் நடித்ததால் பணம் வந்தது.பணத்திற்காகத்தான் படங்களில் நடித்தேன் பணம் தான் முக்கியம். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முட்டி தெரிய போட்டோ போட்டாலே அது கவர்ச்சி என்கிறார்கள்.
சுடிதார் போட்டாலும் கவர்ச்சி,புடவை கட்டினாலும் கவர்ச்சி , நைட்டி போட்டாலும் கவர்ச்சி என்று சொன்னால் எப்படி. முதலில், கவர்ச்சி என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என்றார்.