தனுஷால் சிக்கி கொண்ட பிரபல நடிகை..! எதனால் தெரியுமா?
நடிகர் தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் நடிகை ப்ரியா பவானி ஷங்கருக்கு தொல்லை கொடுத்து வருகின்றன.
நடிகர் தனுஷ் தற்போது இரண்டு மொழிகளில் உருவாகும் வாத்தி திரைப்படத்தில் நடத்து வருகிறார். அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கும் நானே வருவேன்,மித்ரன் ஜவஹர் இயக்கும் திருசிற்றம்பலம் ஆகிய படங்களில் நடித்து தற்போது படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ளன.
இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத்தின் இசையில் உருவாகும் திருச்சிற்றம்பலம் படத்தின் அறிவிப்பு வந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆனது.
எனவே படக்குழுவிடம் தனுஷ் ரசிகர்கள் தொடர்ந்து அப்டேட் கேட்டு வருகின்றனர். இதனிடையே திருச்சிற்றம்பலம் படத்தின் சில காட்சிகள் இணையத்தில் வெளியான நிலையில் படக்குழு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து படத்தின் அறிவிப்பை விரைவில் வெளியிடுவார்கள் என பேசப்படுகிறது. திருச்சிற்றம்பலத்தில் நடித்த நடிகை ப்ரியா பவானி ஷங்கர் சமூகவலைத்தளத்தில் தன் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.
இதை பார்த்து கமாண்ட் செய்து வரும் தனுஷ் ரசிகர்கள் பலர் திருச்சிற்றம்பலம் குறித்து அப்டேட் கேட்டு வருகின்றனர்.