பிரதமர் மோடியை கொலை செய்ய சதித்திட்டம் - 20 ஸ்லீப்பர் செல்கள் ஆக்டிவேட் - NIAவுக்கு வந்த இமெயிலால் பரபரப்பு

Modi NIA Prime-Minister பிரதமர்மோடி Conspiracy-to-murder Excitement-by-email கொலைசெய்யசதித்திட்டம் இமெயிலால்பரபரப்பு
By Nandhini Apr 02, 2022 06:34 AM GMT
Report

பிரதமர் மோடியை கொலை செய்ய 20 ஸ்லீப்பர் செல்கள் ஆக்டிவேட் செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடியை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக தேசிய புலனாய்வு முகமை NIA-மும்பை பிரிவுக்கு இ-மெயில் வந்திருக்கிறது. இதனையடுத்து, மத்திய பாதுகாப்பு படைகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், கண்காணிப்பு நடவடிக்கைகளை போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த இ-மெயிலில் குறிப்பிட்டிருப்பதாவது -

சதித்திட்டம் குறித்து இ-மெயில் அனுப்பியவர், என்னை பிடிக்க முயற்சித்தால் நான் தற்கொலை செய்து கொள்வேன். இதனால், சதி குறித்த விவரங்கள் எதுவும் யாருக்கும் கிடைக்காது.

பிரதமரை கொலை செய்ய 20 ஸ்லீப்பர் செல்கள் ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளன. அந்த 20 ஸ்லீப்பர் செல்கள் இடம் 20 கிலோ அளவிற்கு ஆர்டிஎக்ஸ் வெடி பொருட்கள் உள்ளது.

தற்போது ஆரம்பக்கட்ட வேலைகள் தொடங்கியுள்ளது. இறுதிகட்ட வேலைகளை செயல்படுத்த ஸ்லீப்பர் செல்கள் காத்துக் கொண்டிருக்கிறது.

இந்த சதித் திட்டத்தில் பல்வேறு தீவிரவாத அமைப்புகள் ஈடுபட்டுள்ளன.

இவ்வாறு அந்த இ-மெயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NIA- மும்பை பிரிவுக்கு வந்த இந்த இ-மெயிலை விசாரணைக்காக போலீசார் சில அமைப்புகளுக்கு பகிர்ந்துள்ளனர்.

சைபர் கிரைம் அமைப்பு மின்னஞ்சல் வந்த ஐபி அட்ரஸ் கண்டுபிடித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

பிரதமர் மோடியை கொலை செய்ய சதித்திட்டம் - 20 ஸ்லீப்பர் செல்கள் ஆக்டிவேட் - NIAவுக்கு வந்த இமெயிலால் பரபரப்பு | Prime Minister Modi Conspiracy To Murder