நம்பிக்கை இல்லா தீர்மானம் - மக்களவை வந்தார் பிரதமர் மோடி
மணிப்பூர் விவகாரம் குறித்து மத்திய அரசு மீது எதிர்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது பதில் அளிக்க பிரதமர் மோடி மக்களவை வந்துள்ளார்.
நம்பிக்கை இல்லா தீர்மானம்
மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசு மவுனம் காட்டி வருவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் மக்களவையில் எதிர்க்கட்சிகள் மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது.
மணிப்பூர் விவகாரம் குறித்து ராகுல் காந்தி மக்களவையில் பேசுகையில், மத்திய அரசு மணிப்பூரில் பாரத மாதாவை கொன்று விட்டீர்கள் என்று கடுமையாக ஆவேசத்துடன் குற்றம் சாட்டினார். பிரதமர் அவைக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார்.
மக்களவையில் பிரதமர்
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மக்களவைக்கு வருகை தந்துள்ளார். அவர் 4 மணிக்கு பதில் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.