சென்னை வந்த பிரதமர் மோடி வரவேற்ற ஆளுநர் , முதலமைச்சர்

By Irumporai May 26, 2022 12:09 PM GMT
Report

சென்னை விமான நிலையத்திற்கு வந்த மோடியை ஆளுநர், ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன், அமைச்சர்கள் துரை முருகன் மற்றும் பொன்முடி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி வரவேற்றனர்.

ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்ட பிரதமர் மோடி. சென்னை வந்தடைந்தார்விமான நிலையத்தி பிரதமரை அமைச்சர்கள் துரைமுருகன், கே.என் நேரு, ஏ.வ.வேலு ஆகியோர் வரவேற்றனர்.

ரெயில்வே, சாலை உள்பட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்னும் சற்று நேரத்தில் சென்னை வருகை தருகிறார். மாலை 5.30 மணியளவில் சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் அங்கிருந்து சாலை மார்க்கமாக நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டார் அங்கு முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமரை வரவேற்றார்.

பிரதமர் மோடியை வரவேற்க 20க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக பிரமாண்ட ஏற்பாடுகளை செய்துள்ளது. மாநிலம் முழுவதும் இருந்து 10,000-க்கும் மேற்பட்ட பாஜகவினர் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.

பிரதமர் மோடி பிரதமரின் தமிழக பயணத்தின் போது நாட்டிற்கு அர்ப்பணித்த திட்டங்கள் இதில் 75 கி.மீ தொலை தூரமுள்ள ரூ.500 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்ட மதுரை - தேனி இடையிலான ரயில் தடத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார் மேலும், சென்னை தாம்பரம்-செங்கல்பட்டு இடையேயான 30 கி.மீ தொலைவுக்கு ரூ.590 கோடி மதிப்பில் 3-வது ரயில்பாதையை நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.