சுற்றுச்சூழலை பாதுகாக்க 'பிரதமரின் இ-பஸ்' திட்டம் - தமிழகத்தில் எந்தெந்த நகரங்களில்?

Tamil nadu Prime minister India
By Jiyath Oct 04, 2023 07:35 AM GMT
Report

பிரதமரின் இ-பஸ் திட்டத்திற்கு தமிழகத்தில் இருந்து 11 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இ-பஸ் திட்டம்

பெட்ரோலிய பொருட்கள் பயன்பாடு மற்றும் மாசு குறைப்புக்கு உதவியாக இந்தியாவில் தற்போது இருசக்கர வாகனங்கள் முதல் பேருந்துகள் வரை மின்சார வாகனங்கள் வந்துள்ளன.

சுற்றுச்சூழலை பாதுகாக்க

அந்தவகையில் 'பிரதமரின் இ-பஸ்" என்ற பெயரில் புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு இந்த முடிவை மேற்கொண்டது.

இதற்காக நாடு முழுதும், 169 நகரங்களில், 10,000 இ -பஸ்கள் இயக்க, 20,000 கோடி ரூபாயை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.மேலும் இ-பஸ்களை இயக்குவதற்கான நகரங்களை தேர்வு செய்யும் பணிகளும் முடிவடைந்துள்ளது.

எந்தெந்த நகரங்கள்?

இது தொடர்பாக மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறை, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் "பிரதமரின் இ-பஸ் திட்டத்தில், தமிழ்நாட்டில் 3 லட்சத்துக்கும் மேலான மக்கள் வசிக்கும் நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழலை பாதுகாக்க

முதற்கட்டமாக கோவை, மதுரை, திருச்சி, ஈரோடு, சேலம், திருப்பூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, வேலுார், ஆவடி, அம்பத்தூர் ஆகிய நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்நகரங்களில் இ-பஸ் திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை தமிழக அரசு அனுப்ப வேண்டும். இத்திட்டத்தில் 10 ஆண்டுகளுக்கான செலவுக்கான நிதியையும், மத்திய அரசே வழங்க வாய்ப்புள்ளது' என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.