#Live; குடியரசு தலைவர் தேர்தல் முடிவுகள் - திரௌபதி முர்மு முன்னிலை..!
குடியரசு தலைவர் தேர்தல் முடிவுகளில் திரௌபதி முர்மு முன்னிலையில் இருந்து வருகிறார்.
குடியரசுத் தலைவர் வாக்கு எண்ணிக்கை
கடந்த 18-ம்தேதி குடியரசுத் தலைவர் வாக்குப்பதிவு நடைபெற்றது. நாடாளுமன்றம் மற்றும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளிலும் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டன.
இதில் பதிவான வாக்குகள் வாக்குப்பெட்டியில் அடைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது நாடாளுமன்ற வளாகத்தில் எண்ணப்பட்டு வருகின்றனர்.
இதில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் திரௌபதி முர்மு முன்னிலையில் இருந்து வருகிறார்.
முன்னிலை நிலவரம்
திரௌபதி முர்மு 540 வாக்குகள் பெற்றுள்ளார் அதன் மதிப்பு - 3,78,000.
எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா 208 வாக்குகள் பெற்றுள்ளார் அதன் மதிப்பு 1,45,600 என்று தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்துள்ளார்.