இந்தியாவின் அதிசயத்தை உலகம் பார்க்கிறது : குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சுதந்திர தின உரை!
75 வது சுதந்திர தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் இந்தியாவின் அதிசயத்தை உலகம் பார்ப்பதாகவும் மிகப்பெரிய மற்றும் மிகவும் துடிப்பான ஜனநாயக நாடு இந்தியா என்று புகழாரம் சூட்டினார்.
மேலும் 75 ஆண்டு பயணத்தை திரும்பிப் பார்க்கும்போது, நாம் பயணித்த கணிசமான தூரத்தைப் பற்றி பெருமிதம் கொள்ள எங்களுக்கு காரணங்கள் உள்ளன.
தவறான திசையில் விரைவான முன்னேற்றத்தை விட சரியான திசையில் மெதுவான மற்றும் நிலையான படிகள் விரும்பத்தக்கது என்று காந்திஜி நமக்குக் கற்பித்தார்.
அதன் படி பயணித் வந்துள்ளோம். சுதந்திர தினம் நமக்கு திருவிழா. தலைமுறை தலைமுறையாய் போராடிய சுதந்திர போராளிகளால் இது சாத்தியமானது; சில சுதந்திர போராட்ட வீரர்களை பற்றி நாம் அறிந்திருப்போம் பல சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்கள் நமக்கு தெரியாதவை.
நமக்கு தெரிந்த தெரியாத பல சுதுந்திர போராட்ட வீரர்களால், இன்று நீங்களும் நானும் அவர்களின் வீரம் நிறைந்த செயல்களால் சுதந்திர காற்றை சுவாசிக்கிறோம். அந்த துணிச்சலான தியாகிகளின் புனிதமான நினைவுக்கு மரியாதை செலுத்துவதாக கூறிய குடியரசுத்தலைவர் கொரோனா தொற்றுநோயின் தீவிரம் குறைந்துவிட்டது. ஆனால் கொரோனா இன்னும் நீங்கவில்லை என கூறினார்.
President Kovind greets citizens on 75th Independence Day, says world looks up at miracle of India
— ANI Digital (@ani_digital) August 14, 2021
Read @ANI Story | https://t.co/KcwVs1aK1U#IndependenceDay #PresidentKovind pic.twitter.com/KcZWf6JVKZ
மேலும், கடந்த ஆண்டு, அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்த முயற்சிகளால், தொற்றுநோய்களின் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவருவதில் நாம் வெற்றி பெற்றோம். நமது விஞ்ஞானிகள் மிகக் குறுகிய காலத்தில் தடுப்பூசிகளை உருவாக்குவதில் வெற்றி பெற்றனர்.
எனவே, இந்த ஆண்டின் தொடக்கத்தில்,வரலாற்றில் மிகப்பெரிய தடுப்பூசி செலுத்தும் பயிற்சியை நாம் தொடங்கியதால் நம்பிக்கையுடன் செயல்படுவதாக கூறினார்.