விஜயகாந்த் தமிழகத்தை மீட்டெடுப்பார் : பிரேமலதா

By Irumporai May 27, 2022 01:55 PM GMT
Report

பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வை கண்டித்து ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் தேமுதிக சார்பில் ஆர்ப்பட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், “நூல் விலை உயர்வால் தமிழ்நாட்டில் உள்ள பாதி மாவட்டங்கள் ஸ்தம்பித்துள்ளன. ஆலைகள் மூடப்பட்டு வேலைவாய்ப்பு இல்லாமல் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும், நூல் விலை உயர்வால், வாரத்திற்கு மூன்று நாட்கள் ஜவுளி நிறுவனங்கள் கட்டாயம் விடுமுறை விட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது,நடிகர் சங்கத்தின் கடனை அடைத்து எப்படி நடிகர் சங்கத்தை மீட்டெடுத்தாரோ, அது போல தமிழகத்தின் கடனை அடைத்து தமிழகத்தை விஜயகாந்த் மீட்டடெடுப்பார்.

ஆட்சிக்கு வந்தால் ஒரே ஆண்டில் அனைத்தையும் சரிசெய்வோம் எனக் கூறினார்.