ஸ்டாலின் முதல்வராவது உறுதி: பிரேமலதா
Premalatha Vijayakanth
By Fathima
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தனது மகன்களுடன் சென்னை சாலிகிராமத்தில் வாக்களித்தார்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்களின் மதச்சார்பற்ற கூட்டணி நிச்சயமாக ஆட்சி அமைக்கும், 200 தொகுதிகளுக்கு மேல் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்.
மக்கள் பெரிய ஆதரவை எங்களுக்கு வழங்கியுள்ளனர், நான் விருத்தாச்சலம் தொகுதிக்கும், விஜய பிரபாகரன் விருதுநகர் தொகுதிக்கும் செல்கிறோம்.
அனைவரும் வாக்களியுங்கள், முதன்முறையாக வாக்களிக்கும் இளைஞர்கள் வாழ்த்துகள், ஜனநாயக கடமையை ஆற்றுங்கள், இளைஞர்கள் தான் எதிர்காலம், உங்கள் மனதிற்கு சரியென்று படுகிறதை செய்யுங்கள், அனைவரும் நிச்சயம் வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார்.
