கர்ப்பகாலத்தில் இப்படி ஒரு நோய் வருமா? - இதனால் அணைத்து பற்களையும் இழந்த பெண்!
பெண்கள் கர்ப்பகாலத்தில் வரும் அறிய வகை நோயால் பாதிக்கப்பட்ட பெண் தன் சோகத்தை பகிர்ந்துள்ளார்.
கர்ப்பமான பெண்
பிரிட்டனில் கூப்பர் என்பவருக்கு 26 வயதில் மனைவி உள்ளார். இவர் 2017-ல் பிரான்சில் உள்ள பனிச்சறுக்கு ரிசார்ட் ஒன்றில் செவிலித்தாயாக பணிபுரிந்தபோது கர்ப்பமானார். பிறகு ஒரு வாரத்திற்குள் அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதால், கர்ப்ப காலத்திலேயே அவர் மீண்டும் பிரிட்டனுக்கு திரும்பினார்.
அங்கு அவருக்கு, "ஹைபர்யெமெசிஸ் கிராவிடரம்" (Hyperemesis Gravidarum) என்ற அரியவகை நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இது 1% பெண்களை மட்டுமே பாதிக்கின்ற ஒரு அரிய மற்றும் தீவிரமான கர்ப்பகால நோயாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் அடிக்கடி வாந்தி எடுப்பார்கள்.
பற்கள் விழுந்ததால் வேதனை
இந்நிலையில், இவர் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். பிரசவம் முடிந்ததும் அவருடைய வாந்தியெடுத்தல் மற்றும் குமட்டல் அறிகுறிகள் நின்றுவிட்டன. ஆனால், 6 மாதங்களுக்குப் பிறகு அவருக்கு, வாந்தியின் அமிலத்தன்மையால் சேதமடைந்த பற்கள் அனைத்தையும் அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
சில வருடங்களுக்கு பிறகு அவர் மேலும் 2 குழந்தைகளைப் பெற்றெடுத்தார். அந்த 2 முறையும் எச்.ஜி. (HG) நோய் பாதிப்பு இருந்திருக்கிறது. இதனால் அணைத்து பற்களையும் இழந்த அவர் கூறியது, "இந்த நிகழ்வு மிகவும் அதிர்ச்சிகரமானதாக இருந்தது. எனது மோசமான எதிரிக்கு கூட இந்நிலை வர நான் விரும்பமாட்டேன்.
இறப்பது போல் ஒரு உணர்வு வருவதால், பலர் இதனை புற்றுநோய் சிகிச்சைக்காக கொடுக்கப்படும் கீமோதெரபியின் பக்க விளைவுகளுடன் ஒப்பிடுகிறார்கள். இது ஒரு விரும்பத்தகாத நிலை. இது உணர்ச்சி ரீதியாகவும், உடல் ரீதியாகவும் என்னை சோர்வடைய செய்கிறது. தற்பொழுது இதில் மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளேன். ஆனால் உணவு பழக்கம் முன்பு போல் இல்லை, என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.