ஏமாற்றிய காதலன் - கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய கர்ப்பிணி!
தன்னைக் காதலித்து கர்ப்பமாக்கிய காதலனின் திருமணத்தை கர்ப்பிணி பெண் நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதல் விவகாரம்
திண்டுக்கல், வத்தலகுண்டு அருகே உள்ள ஒத்தப்பட்டியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் பாலமுருகன். இவரது மூத்த மகள் நாகப்ரியா(30). தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். மதுரை, திருமங்கலம் பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் சின்னச்சாமி(32).
[3G89BU
இவர் பெங்களூருவில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக நாகப்ரியாவும், சின்னச்சாமியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் நெருங்கிப் பழகியதில் நாகப்ரியா தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.
பெண் கர்ப்பம்
இந்நிலையில், விருதுநகரைச் சேர்ந்த ஒரு பெண்ணை சின்னசாமிக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர். இன்று அவர்களது திருமணம் திருமங்கலம் பேருந்து நிலையம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற இருந்தது.
இதுகுறித்து தகவலறிந்த நாகப்ரியா, தனது பெற்றோர் மற்றும் உறவினருடன் சின்னச்சாமிக்கு திருமணம் நடக்க இருந்த திருமண மண்டபத்திற்கு வந்தார். அங்கு அனைவரின் முன்பும் தன்னைச் சின்னச்சாமி காதலித்து கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்து கொள்ள கூறினார்.
சிக்கிய காதலன்
மேலும், புகாரின் அடிப்படையில் சம்பவ இடம் விரைந்த போலீஸார் மணமக்கள் குடும்பத்தினருடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின் நாகப்ரியா மற்றும் சின்னசாமி குடும்பத்தினரிடம் பேசி திருமணத்தை நிறுத்தினர்.
அதன்பின் பின் இரு குடும்பத்தினரையும் மகளிர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.