5 மாத கர்ப்பம்! கடும் வெயிலில் பணியாற்றும் இளம்பெண் டிஎஸ்பி- குவியும் பாராட்டுகள்
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை லட்சத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.
ஆக்சிஜன் கிடைக்காமலும், மருத்துவத்திற்கு படுக்கை கிடைக்காமலும் கொரோனாவுக்கு பலியாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால், சடலங்களை வைத்துக் கொண்டு ஆம்புலன்ஸ்கள் காத்துக் கிடக்கும் சூழல் உள்ளது.
இதற்கிடையே சட்டீஸ்கர் உட்பட பல மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சட்டீஸ்கரின் பஸ்தார் பகுதியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள பெண் டிஎஸ்பி ஷில்பா சாஹு, மக்களுக்கு அறிவுரைகள் கூறி வருகிறார்.
5 மாத கர்ப்பிணியாக இருந்த போதும், கடும் வெயிலில் மக்களுக்காக பணியாற்றி வருகிறார், விதிகளை மீறி பொதுமக்கள் வெளியே வரும் நிலையில், அவர்களைப் அறிவுரை சொல்லி அனுப்பி வைத்து வருகிறார்.
இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது.