பிரதாப் போத்தனின் உடலைப் பார்த்து கண்கலங்கிய மனைவி, மகள் - காண்போர் நெஞ்சம் ரணமானது
பிரதாப் போத்தன்
திரைப்பட நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன் (69) சென்னையில் உள்ள தனது வீட்டில் காலமானார். பாலுமகேந்திரா இயக்கிய “அழியாத கோலங்கள்” திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நடிகராக அறிமுகமான பிரதாப் போத்தன். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் 100 படங்களில் நடித்துள்ளார்.
மார்த்தாண்டன், சீவலப்பேரி பாண்டி உள்ளிட்ட படங்களை பிரதாப் போத்தன் இயக்கி உள்ளார். இந்திய சினிமாவின் தன்னிகரற்ற திரை பிரபலமாக வலம் வரும் பிரதாப் போத்தன் தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்தும், இயக்கியும் உள்ளார்.தேசியவிருதும் வாங்கியுள்ளார்.
நடிகரும், இயக்குநருமான பிராதாப் மோகன் மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகர், நடிகைகள் பலர் இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கண்கலங்கிய மனைவி
நடிகர் பிரதாப் போத்தனின் உடலுக்கு அவரது 2வது முன்னாள் மனைவியான அமலா கண்ணீருடன் வந்து அஞ்சலி செலுத்தினார். அவருடன், மகளும் வந்து கண்கலங்கி அஞ்சலி செலுத்திய காட்சி காண்போரை கலங்க வைத்தது.

உச்ச கட்ட பதற்றம் : சற்று முன்னர் ஈரானின் அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பு தலைமையகத்தை குண்டுவீசி தகர்த்தது இஸ்ரேல் IBC Tamil

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan
