இதெல்லாம் அநியாயம் .. இந்த தண்டனை அதிகம் : ராகுலுக்கு ஆதரவாக பேசும் பிரசாந்த் கிஷோர்

Indian National Congress Rahul Gandhi
By Irumporai Mar 26, 2023 04:51 AM GMT
Report

ராகுல் காந்தி மீது பாஜக நடவடிக்கை எடுத்தது குறித்து பிரசாந்த் கிஷோர் கருத்து தெரிவித்துள்ளார்.

 பிரசாந்த் கிஷோர்

ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி, எம்.பி. பதவி பறிக்கப்பட்ட விவகாரத்தில் அரசியல் கட்சித்தலைவர்கள் தொடர்ந்து கருத்து கூறி வருகின்றனர். இந்நிலையில் பிரசாந்த் கிஷோர் (தேர்தல் வியூக வல்லுனர்) ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

பாஜக யோசிச்சு இருக்கணும்

அதில் நான் சட்ட நிபுணர் அல்ல. இருப்பினும் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை அதிகப்படியானதாக தோன்றுகிறது. இது முதல் நிகழ்வும் அல்ல, கடைசி நிகழ்வாகவும் இருக்காது. சிறிய இதயம் படைத்த யாரும் மாமனிதர்களாக மாற மாட்டார்கள் என்ற முன்னாள் பிரதமர் வாஜ்பாயியின் பிரபலமான வரியை மத்திய அரசுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன் என கூறிய பிரசாந்த் கிஷோர்.

இதெல்லாம் அநியாயம் .. இந்த தண்டனை அதிகம் : ராகுலுக்கு ஆதரவாக பேசும் பிரசாந்த் கிஷோர் | Prashant Kishor Rahul Gandhi Punishment Bjp

பா.ஜ.க.வினர் இன்றைக்கு ஆட்சி அதிகாரத்தில் உள்ளனர். அவர்கள் பெரிய மனதைக் காட்டி இருக்க வேண்டும். அவர்கள் இன்னும் சில நாட்கள் காத்திருந்து இருக்க வேண்டும். ராகுல் காந்தி மேல்முறையீடு செய்து, அங்கு நிவாரணம் கிடைக்காதபோது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என கூறினர்.