பிரச்சனை ஏற்பட்டால் முகத்தை கூட பார்த்துக்கொள்ள மாட்டோம் - பிரசாத்
விராட் கோலி, ரவி சாஸ்திரி ஆகியோருடன் பலமுறை வாக்குவாதம் செய்திருக்கிறேன், அப்போதெல்லாம் முகத்தை கூட பார்த்துக்கொள்ள விரும்பமாட்டோம் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தேர்வாளர் எம்எஸ்கே. பிரசாத் தெரிவித்துள்ளார்.
மேலும், நாங்கள் ஒன்றாகக் கூட்டத்தில் பங்கேற்கும்போது, கடும் வாக்குவாதம் நடைபெறும் என்றும் மீட்டிங் முடிந்த பிறகு அவர்கள் முகத்தைக்கூட என்னால் பார்க்க முடியாது என தெரிவித்தார்.
அவர்களும் அதே மனநிலையில்தான் இருப்பார்கள். இருப்பினும், மறுநாள் எப்போதும் போல சகஜமாகப் பேசிக்கொள்வோம் என கூறிய அவர், நான் மேலாண்மை துறை மாணவன் என்பதால், என்னால், ஒரு விஷயத்தை சரியாகக் கையாள முடியும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், யாரையும் குறைசொல்லும் பழக்கம் என்னிடம் கிடையாது. வேண்டுமென்றால், எங்களின் வாக்குவாதம் தொடர்பாக விராட், சாஸ்திரியிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள் என்றார். நான் பலமுறை இருவரையும் சமாதானப்படுத்தும் அளவுக்குப் பிரச்னைகள் நடந்திருக்கிறது என்றும் கூறியுள்ளார்.