இன்று தொடங்குகிறது 10,11,12ஆம் வகுப்பு செய்முறை தேர்வு..!

Tamil nadu
By Thahir Apr 25, 2022 12:42 AM GMT
Report

இந்த நிலையில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான, செய்முறைத் தேர்வுகள் இன்று (ஏப்.25) தமிழகம் முழுவதும் தொடங்கி நடைபெற உள்ளது.

மே 2 ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் தேர்வை மாநிலம் முழுவதும் சுமார் 19 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர்.

மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒவ்வொரு மாவட்டத்திலும் பல கட்டங்களாக தேர்வுகள் நடைபெற உள்ளன.

சென்னையில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வில் பங்கேற்கின்றனர். தேர்வுத் துறை பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது.

வழக்கமாக 3 மணி நேரம் நடத்தப்படும் செய்முறைத் தேர்வு, பள்ளிகளின் பரிந்துரையின்படி நடப்பாண்டு முதல் 2 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது.