ரணில் ஆட்சிக்கு வருவதை பிரபாகரன் விரும்பவில்லை! - ஜெயபாலன் நேர்காணல்

Sri Lanka Economic Crisis Sri Lanka SL Protest
By Swetha Subash May 14, 2022 12:24 PM GMT
Swetha Subash

Swetha Subash

in இலங்கை
Report

இலங்கையில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிரான மக்களின் போராட்டம் தீவிரமாக நடைபெற்றது.

ஒரு மாதத்துக்கும் மேலாக அமைதியாக நடந்துவந்த இந்த போராட்டத்தில் சில தினங்களுக்கு முன்பு வன்முறை மூண்டதால் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், 9 பேர் உயிரிழந்தனர்.இந்த கலவரத்தை தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகினார்.

மகிந்த ராஜபக்ச பதவி விலகியதை தொடர்ந்து, புதிய பிரதமர் தலைமையில் அனைத்துக்கட்சிகளும் இணைந்த இடைக்கால அரசு அமைக்க அதிபர் கோட்டாபய ராஜபக்ச நடவடிக்கை எடுத்தார். பேச்சுவார்த்தை முடிவில் 73 வயதான முன்னாள் பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவிடம், பிரதமர் பதவியை ஒப்படைத்தார்.

அவரும் நாட்டின் 26-வது பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். அவர் தனது அலுவலகத்தில் பணிகளை தொடங்கினார். இந்நிலையில், இலங்கையில் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தலைமையில் புதிய அமைச்சர்கள் 4 பேர் இன்று பதவியேற்றனர்.

கலவரம் மற்றும் மக்கள் போராட்டத்திற்கு மத்தியில் அடுத்தடுத்த நடந்தேரிய அரசியல் நிகழ்வுகளால் இலங்கையில் தொடர்ந்து குழப்பமான சூழலே இருந்து வருகிறது. இதனிடையே இலங்கையில் நடந்து வரும் மக்களின் போராட்டம் மற்றும் ஆட்சி மாற்றம் குறித்து ஐபிசி தமிழ் நடத்திய நேர்காணல் ஒன்றில் பதிலளித்து பேசியுள்ளார் ஆடுகளம் ஜெயபாலன்.