இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - வீடுகள் குலுங்கியதால் மக்கள் ஓட்டம்
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இன்று 6.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆகப் பதிவாகியுள்ளதாக நிலநடுக்க தேசிய மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்திற்குப் பிறகு சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை, ஆனால் நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
வடக்கு சுமத்ராவின் படங்சிடெம்புவான் நகரின் தென்மேற்கே, கடலில் 84 கிலோமீட்டர் (52 மைல்) ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
குடியிருப்பாளர்கள் வீடுகளை குலுக்கிய இந்த நிலநடுக்கத்தால் எந்தவித சேதங்களும் இதுவரை பதிவாகவில்லை என இந்தோனேசியா ஊடகங்கள் தெரிவிக்கின்றன.