தமிழகத்தை நெருங்கும் மாண்டஸ் புயல்; ஊரகத் திறனாய்வு தேர்வு தள்ளிவைப்பு
மாண்டஸ் புயல் காரணமாக ஊரகத் திறனாய்வு தேர்வு தள்ளிவைக்கப்படுவதாக தேர்வு துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.
ஊரகத் திறனாய்வு தேர்வு
ஊராட்சி மற்றும் பேரூராட்சி அரசு பள்ளிகள், அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்குவதற்காக ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது.
இத்திடத்தின் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 100 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இளங்கலை பட்டப்படிப்பு வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இந்த தேர்வு வருகிற டிசம்பர் மாதம் 10ம் தேதி நடத்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்த தேர்விற்காக தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 97 ஆயிரம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.
புயலால் தேர்வு தேதி தள்ளிவைப்பு
வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் தமிழகத்தின் வடமாவட்டங்கள் வழியாக கரையை கடக்கக்கூடும் எனவும் இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் ஊரகத் திறனாய்வு தேர்வ தள்ளிவைக்கப்படுவதாக தேர்வு துறை இயக்குநர அறிவித்துள்ளார்.
10ம் தேதி நடக்கவிருந்த இந்த தேர்வு வரும் 17ம் தேதி நடைபெறும் என்றும் தேர்வு துறை அறிவித்துள்ளது.