ஆபாசப் பட விவகாரம்: சீக்கிரம் மீண்டு வருவோம் நடிகை ஷில்பா ஷெட்டி!

case shilpasheety challeng pornography
By Irumporai Jul 23, 2021 11:11 AM GMT
Report

ஆபாச பட விவகாரம் தொடர்பாக, கணவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நடிகை ஷில்பா ஷெட்டி, சவால்களில் இருந்து தப்பிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

ஆபாசப் படங்களை தயாரித்து விற்பனை செய்ததில் ஷில்பாஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு தொடர்பு இருந்ததாக போலீசருக்கு தகவல் வந்ததால் அவருடன் 11 பேரை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அவர்களின் போலீஸ் காவல் 27 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக ஷில்பா ஷெட்டிக்கும் போலீசார் சம்மன் அனுப்பி விசாரிக்க இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில் அவருக்கு சம்மன் அனுப்பப்பட வில்லை. இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்காமல் இருந்த நடிகை ஷில்பா ஷெட்டி, இப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் புகழ்பெற்ற எழுத்தாளர் ஜேம்ஸ்தர்பரின் வார்த்தைகளை குறிப்பிட்டுள்ள ஷில்பாஷெட்டி : கோபத்தோடு பின்னோக்கி திரும்பிப் பார்க்க வேண்டாம், அல்லது பயத்தோடு முன்னோக்கி செல்லவேண்டாம்.

ஆனால் சுற்றிலும் விழிப்புடன் இருங்கள்எங்களை காயப்படுத்தியவர்கள், நாங்கள் உணர்ந்த ஏமாற்றங்கள்.

ஆபாசப் பட விவகாரம்: சீக்கிரம் மீண்டு வருவோம்  நடிகை ஷில்பா ஷெட்டி! | Pornography Escape From Challenges Shilpa Shetty

அனுபவித்த துரதிர்ஷ்டம் ஆகியவற்றின் மீதான கோபத்துடன் திரும்பிப் பார்க்கிறோம். 

நாங்கள் எங்கள் பணியை இழக்கலாம், நோய்களால் பாதிக்கப்படலாம், அல்லது வேண்டிய ஒருவரின் மரணத்தை சந்திக்கும் என்கிற அச்சத்தை எதிர்நோக்குகிறோம்.

கடந்த கால சவால்களில் இருந்து தப்பித்து வந்தேன். எதிர்காலத்திலும் சவால்களில் இருந்து மீண்டு வருவேன் என குறிப்பிட்டுள்ளார்