ஆபாச படத்தில் நடித்த நடிகை பலாத்காரம்..ஷில்பா ஷெட்டி கணவர் ராஜ்குந்திரா குறித்து வெளியான பகீர் தகவல்!
நடிகை ஷில்பா ஷெட்டி கணவர் ராஜ்குந்திரா தயாரித்த ஆபாச படத்தில் நடித்த நடிகையை ஏமாற்றி பலாத்காரம் செய்து படம் பிடித்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மும்பையில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாச படங்கள் தயாரித்த வழக்கில் சிக்கியுள்ளார் .அவர் வெப் சீரிஸ் எடுப்பதாக கூறி பல நடிகைகளை வைத்து ஆபாச படமெடுத்து அதை பல ஆப் மூலம் வெளியிட்டு கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ளதை போலீசார் கண்டறிந்து ராஜ்குந்திராவை கைது செய்தனர் .அவர் இப்போது ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மேலும் இருவர் விரைவில் கைதாவார்கள் என மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த மோசடி வழக்கில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஆபாச படத்தில் நடித்த நடிகை ஒருவர் பேட்டியளித்துள்ளார் .அந்த நடிகை இன்ஸ்டாகிராமில் வலைத்தொடரில் நடிக்க ஆடிஷன் நடப்பதாக வந்த விளம்பரத்தை பார்த்து விட்டு ராஜ்குந்திரா
ஸ்டுடியோவுக்கு சென்றுள்ளார் .அப்போது அவர்கள் அந்த பெண்ணிடம் ராணி வேடம் என்று கூறி ஒரு ஸ்க்ரிப்ட்டை கொடுத்துள்ளனர் .பிறகு அங்கிருந்த ஒருவர் அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் .
அதை சிலர் கேமராவில் படம் பிடித்ததாகவும் கூறினார் .அப்போது அந்த நடிகை எதிர்த்த போது அங்கிருந்தவர்கள் அவர் மீது வழக்கு போடுவோம் என்று மிரட்டியுள்ளதாகவும் ,பிறகு அவரை ஒருவர் பலாத்காரம்
செய்வதை படம் பிடித்ததாகவும் கூறினார் .பல மணிநேரம் நடநத இந்த ஷூட்டிங்கில் அந்த நடிகைக்கு வெறும் 10000 மட்டுமே கொடுத்ததாகவும் அந்த நடிகை கண்ணீருடன் கூறினார் .