XXX வெப் சீரியஸில் ஆபாச காட்சி - ஷாக் ஆன ராணுவ வீரர் மனைவி..தயாரிப்பாளருக்கு பிடிவாரண்ட்

By Thahir Sep 29, 2022 09:06 AM GMT
Report

வெப் சீரியஸில் ராணுவ வீரர் மனைவியை ஆபாசமாக சித்தரித்து வெளியான காட்சி தொடர்பாக தயாரிப்பாளருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது நீதிமன்றம்.

வெப் சீரியஸில் ஆபாச காட்சி - வழக்கு 

பிரபல தயாரிப்பாளரான ஏக்தா கபூர் சொந்தமாக பாலாஜி டெலிபிலிம்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் ஏராளமான திரைப்படங்கள் மற்றும் சீரியல்களை தயாரித்துள்ளார். தற்போது XXX என்ற வெப் சீரியஸ் ஒன்றை தயாரித்துள்ளார்.

XXX வெப் சீரியஸில் ஆபாச காட்சி - ஷாக் ஆன ராணுவ வீரர் மனைவி..தயாரிப்பாளருக்கு பிடிவாரண்ட் | Porn Scene In Xxx Web Series Arrest Warrant

இந்த வெப் சீரியஸ் ஒடிடி தளத்தில் மட்டும் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இதில் ராணுவ வீரரின் மனைவியை ஆபாசமாக சித்தரித்து இருப்பதாக கூறி பீகாரைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சம்பு குமார் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வெப் சீரியஸின் சீஸன் 2ல் ராணுவ வீரரின் மனைவிக்கு எதிராக பல ஆட்சேபகரமான காட்சிகள் இடம் பெற்றிருப்பதாகவும், இது ராணுவ வீரர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக இருக்கிறது என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

தயாரிப்பாளருக்கு பிடிவாரண்ட் 

இம்மனுவில் ஏக்தா கபூர் மட்டுமல்லாது அவரது தாயார் ஷோபா கபூரும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தார். இந்த மனு 2020 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மனுவை விசாரித்த நீதிமன்றம் இருவரையும் ஆஜராகும் படி சம்மன் அனுப்பியது.

இந்நிலையில் இருவரும் ஆஜராகவில்லை அதேசமயம் ஏக்தா கபூர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் XXX சீரியஸில் ஆட்சேபகரமான காட்சிகள் நீக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்திருந்தார்.

ஆனால் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தால் அவர்கள் இருவருக்கும் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டு இருக்கிறது.