கேமரா முன்பு சட்டையை கழற்றி காட்டிய பிரபல நடிகை - பிரபல நிகழ்ச்சியில் சர்ச்சை
பிரபல லாக்கப் ஷோ நிகழ்ச்சியில் நடிகை பூனம் பாண்டே செய்த செயல் கடும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
இந்தியில் பிக்பாஸ் போன்ற ரியாலிட்டி ஷோவான “லாப் அப்” நிகழ்ச்சியை நடிகை கங்கனா ரனாவத் தொகுத்து வழங்கி வருகிறார். 24 மணிநேரமும் ஒளிபரப்பப்பாகும் இந்நிகழ்ச்சியில் அமெரிக்க சிறை போன்ற இடத்தில் 16 பிரபலங்கள் அடைக்கப்பட்டுவார்கள்.
போட்டியாளர்களா கைதிகளாக 72 நாட்கள்அங்கு தாக்குப்பிடிக்க வேண்டும்.சுற்றிலும் இருக்கும் கேமராக்களிடையே இவர்களின் ஒவ்வொரு நொடியும் நகரும் காட்சிகள் பார்வையாளர்களால் கவனிப்படுகிறது.இதில் ர்ச்சைக்கு பெயர் போன பாலிவுட்நடிகர்கள், நகைச்சுவை நடிகர்கள், விளையாட்டுப் பெண்கள் என அனைவரும் இடம் பெற்றுள்ளனர்.
அந்த வகையில் முனாவர் ஃபாரூகி, சாயிஷா ஷிண்டே, பூனம் பாண்டே, பபிதா போகட், நிஷா ராவல், பயல் ரோஹத்கி, கரண்வீர் போஹ்ரா, சாரா கான், சித்தார்த் சர்மா, சிவம் சர்மா, அஞ்சலி அரோரா, அலி மெர்ச்சன்ட், சுவாமி சக்ரபாணி, மற்றும் தெஹ்சீன் பூனவல்லா ஆகியோர் போட்டியாளர்களாக உள்ளனர்.
இதனிடையே சென்ற வாரம் நாமினேட் பட்டியலில் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே இடம் பெற்றிருந்தார். இதனைத் தொடர்ந்து குற்றப்பத்திரிகையில் இருந்து தன்னை காப்பாற்றினால் அவர்களுக்கு ஒரு பெரிய ஆச்சரியத்தை கொடுப்பேன் என அவர் உறுதியளித்திருந்தார். இதனால் அந்த வாரத்தில் அதிக வாக்குகள் பெற்ற போட்டியாளராக ஆனார்.
இந்நிலையில் ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளிக்கும் விதமாக கேமரா முன்பு தனது டீ-சர்ட்டை கழற்றி சர்ச்சையை கிளப்பியுள்ளார். இதனைக் கண்ட இணையவாசிகள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.