“ஒரு அறைக்குள் பூட்டி வைத்து நாயை அடிப்பது போல என்னை அடித்தார்” - பிரபல நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு

kanganaranaut poonampandey lockupshow poonamsamissue
By Swetha Subash Mar 09, 2022 06:46 AM GMT
Report

ஒரு அறைக்குள் பூட்டி வைத்து நாயை அடிப்பது போல என்னை அடித்தார் என கனவன் மீது பிரபல நடிகை குற்றம் சாட்டி இருப்பது ஹிந்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பாலிவுட் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத் தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2008-இல் வெளியான ‘தாம் தூம்’படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

அதன் பின் ஹிந்தி படங்களில் உச்ச நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தும், சிறந்த படங்களை தந்ததன் மூலமும் உச்சத்தை தொட்டு ரசிகர்களிடையே பிரபலமானார்.

கங்கனாவின் அசாத்திய நடிப்பிற்காக மட்டும் ரசிகர்களின் பார்வை அவர் பக்கம் திரும்பவதில்லை இவரின் சர்ச்சைக்குறிய கருத்துக்களாலும் இந்திய அளவில் கவனம் ஈர்க்ககூடியவர்.

“ஒரு அறைக்குள் பூட்டி வைத்து நாயை அடிப்பது போல என்னை அடித்தார்” - பிரபல நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு | Poonam Pandey Opens Up On Violence In Lock Up Show

இந்நிலையில், முதல் முறையாக நடிகை கங்கனா ரனாவத் “லாக் அப்” என்ற ரியாலிட்டி ஷோ-வை ஹிந்தியில் தொகுத்து வழங்கி வருகிறார்.

ஓடிடி தளங்களில் ஒளிப்பரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியை தயாரிப்பாளர் ஏக்தா கபூர் தயாரித்துள்ளார்.

அந்த வகையில் “லாக் அப்” நிகழ்ச்சியில் பிரபல கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே பங்கேற்று கணவரால் தனக்கு நேர்ந்த கொடுமைகளை பற்றி பகிர்ந்தார்.

“ஒரு அறைக்குள் பூட்டி வைத்து நாயை அடிப்பது போல என்னை அடித்தார்” - பிரபல நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு | Poonam Pandey Opens Up On Violence In Lock Up Show

பூனம் பாண்டேவும் சாம் பாம்பேவும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரும் கோவாவுக்கு தேனிலவு சென்ற இடத்தில் தகராறு ஏற்பட்டது.

தன்னை அடித்து சித்திரவதை செய்வதாக கோவா போலீசில் கணவர் மீது பூனம் பாண்டே புகார் அளித்ததின் பேரில் சாம் பாம்பேவை போலீசார் கைது செய்தனர்.

இதுபற்றி பூனம் நிகழ்ச்சியில் கூறும்போது, “நான் சாம் பாம்பேவுடன் 4 வருடங்கள் தொடர்பில் இருந்தேன். அந்த 4 வருடங்களும் சரியாக தூங்கவில்லை. சாப்பிடவில்லை.

தினமும் அவரிடம் அடிவாங்கினேன். யாருக்கும் போன் செய்யக்கூடாது என்று செல்போனை உடைத்தார். நாயை அடிப்பது போன்று என்னை அடித்தார்.

ஒரு அறைக்குள் வைத்து பூட்டினார். இதனால் பல முறை தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தேன்’’ என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.