சம்பளத்தை உயர்த்திய பூஜா ஹெக்டே - அதிர்ச்சியில் ஹீரோயின்கள்!
தமிழில் ஜீவா நடிப்பில் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை பூஜா ஹெக்டே.
பூஜா ஹெக்டே
அதன் பின் பெரிதும் தமிழில் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால், தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகம் பக்கம் கவனத்தை செலுத்தி வந்தார்.
அதில் வெற்றியடைந்த நடிகை பூஜா ஹெக்டேவிற்கு தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
5 கோடி
இதனால் இன்று இந்திய அளவில் பிரபலமான நடிகையாகியுள்ளார். தற்போது தளபதி நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார். இப்படத்தின் மூலம் தமிழில் மீண்டும் ரி என் ரி கொடுத்து இருந்தார்.
இந்நிலையில் தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என சம்பள விஷயத்தில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
நடிகை நயன்தாரா 4 கோடி வரை சம்பளம் வாங்கி வருகின்றார். அவரை மிஞ்சும் அளவிற்கு பூஜா தற்போது தன்னுடைய சம்பளத்தை 5 கோடியாக உயர்த்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.