எல்லாம் இதற்காகத்தான் : வெளியானது பொன்னியின் செல்வன் பாகம்-1

By Irumporai Jul 08, 2022 01:04 PM GMT
Report

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, வந்தியத் தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா, நந்தினி மற்றும் மந்தாகினி என்ற இரட்டை கதாபாத்திரங்களில் ஐஸ்வர்யா ராய், பூங்குழலியாக ஐஸ்வர்யா லட்சுமி, ஆழ்வார்கடியனாக ஜெயராம் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது , சோழ தேசத்திற்குள் அழைத்து செல்கிறது படக்குழு குறிப்பாக ஆத்தித்த கரிகாலனின் இந்த கள்ளும், பாட்டும், ரத்தமும், போர்களமுகம் எல்லாமே அதை மறக்கத்தான்.. அவளை மறக்கத்தான் என்னை மறக்கத் தான்.. என ஆதித்தகரிகலானக சீறும் விகரமின் வசனத்தோடு முடிவடைகிறது டீசர் .