விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்தில் மீண்டும் ஆஜரானார் பொன்முடி !
இன்றைய விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார் பொன்முடி.
அமலாக்கத்துறை சோதனை
அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று (ஜுலை 17) காலை 7 மணிக்கு அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் சிகாமணி எம்.பி ஆகியோருக்கு சொந்தமான சென்னை மற்றும் விழுப்புரம் வீடுகள் மற்றும் மருத்துவமனைகளில் சோதனை மேற்கொண்டனர்.
இதையடுத்து சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள இல்லத்தில் தங்கி இருந்த அமைச்சர் பொன்முடியிடம் 7 பேர் கொண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இரவு 8 மணிக்கு அவரது இல்லத்தில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று தனி அறையில் வைத்து 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். இன்றைய விசாரணை இதையடுத்து அதிகாலை 3 மணிக்கு அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
மீண்டும் விசாரணை
மேலும் பொன்முடியை இன்று 4 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறையினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் பொன்முடியும் அவரது மகன் கவுதம சிகாமணி எம்பியும் அமலாக்கத்துறை ஆவலுக்கம் நோக்கி புறப்பட்டனர். பொன்முடியுடன் ஒரு மருத்துவர் மற்றும் இரண்டு வழக்கறிஞர்கள் சென்றுள்ளனர்.